​திருவண்ணாமலை அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் கைது

​திருவண்ணாமலை அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
Updated on
1 min read

திரு​வண்​ணா​மலை: ​திரு​வண்​ணா​மலை அருகே அரசு பள்ளி மாணவி​களிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாக தலைமை ஆசிரியர் உள்பட 2 ஆசிரியர்​கள் போக்சோ சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டனர்.

திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தில் உள்ள ஓர் அரசு தொடக்க பள்​ளி​யில் பணிபுரி​யும் ஆசிரியர்​கள் மாணவி​களிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்டு வரு​வ​தாக 1098 என்ற சைல்ட் லைன் எண்​ணுக்கு புகார் வந்தது.

இதையடுத்​து, சைல்டு லைன் அலு​வலர்​கள் மற்​றும் சிறார் காவல் பிரிவு சமூக பணி​யாளர் ஆகியோர் சம்​பந்​தப்​பட்ட பள்ளிக்குச் சென்று குழந்​தைகளிடம் உரையாடினர். அப் போது, பள்​ளி​யின் தலைமை ஆசிரியர் ரவி மற்​றும் ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் தங்​களிடம் பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாக 13 மாணவி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து வட்​டார கல்வி அலு​வலர் தில்​லை​நாயகி, திரு​வண்​ணா​மலை அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் நேற்று புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திந்து இரு​வரை​யும் கைது செய்​து, நீதி​மன்​றத்​தில்​ ஆஜர்​படுத்​தி சிறை​யில்​ அடைத்​தனர்​.

​திருவண்ணாமலை அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் கைது
“போராட்டம் குறித்த என் கருத்தை ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன” - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in