சென்னை | ரூ.48 லட்சம் மோசடி: ஜிம் மாஸ்டர் கைது

சென்னை | ரூ.48 லட்சம் மோசடி: ஜிம் மாஸ்டர் கைது
Updated on
1 min read

சென்னை: கோவிலம்​பாக்​கம் எஸ்​.​கொளத்​தூரில் வசிப்​பவர் நிஷாந்தி (36). இவர் தனது தோழி​யுடன் சேர்ந்து அதே பகு​தி​யில் உடற்​ப​யிற்​சிக் கூடம் (ஜிம்) நடத்தி வரு​கிறார்.

ஈசா பல்​லா​வரத்​தைச் சேர்ந்த சிவக்​கு​மார் (36) என்​பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இங்கு பயிற்​சி​யாள​ராக வேலை செய்து வந்​தார். வரவு, செலவு பொறுப்​பு​களை இவரே கவனித்து வந்​தார்.

இந்த நிலை​யில், நிஷாந்தி கடந்த மே மாதம் கணக்கு பார்த்​த​போது, ரூ.48 லட்​சம் வரை மோசடி நடந்​திருப்​பது தெரிய​வந்​தது. இதுகுறித்து சிவக்​கு​மாரிடம் கேட்ட நிலை​யில், வேலை​யில் இருந்து அவர் நின்​று​விட்​டார்.

இதையடுத்​து, மடிப்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் நிஷாந்தி புகார் கொடுத்​தார். போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து விசா​ரித்​தனர்.

இதில், வாடிக்​கை​யாளர்​களிடம் வசூலிக்​கும் மாத சந்தா தொகையை உடற்​ப​யிற்​சிக் கூடத்​தின் கணக்​கில் செலுத்​தாமல், மனைவி மற்​றும் தனது வங்​கிக் கணக்​கில் சிவக்​கு​மார் வரவு வைத்து மோசடி செய்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, அவரை போலீ​ஸார்​ கைது செய்​தனர்​.

சென்னை | ரூ.48 லட்சம் மோசடி: ஜிம் மாஸ்டர் கைது
வடபழனி காவேரி மருத்துவமனையில் செரிமான மண்டல அறிவியல் மையம் தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in