

சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் ஆர்பிஎஃப் போலீஸார், ரயில்வே போலீஸார் இணைந்து, நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கர்நாடகா மாநிலம் மைசூரு அசோகபுரத்தில் இருந்து பெரம்பூர் வழியாக சென்னை சென்ட்ரல் நோக்கி இயக்கப்பட்ட ஒரு விரைவு ரயில் வந்தது.
பெரம்பூர் ரயில் நிலையத்தை அந்த ரயில் அடைந்தபோது, அதில் இருந்து இறங்கியபயணி ஒருவர் தப்பி ஓட முயன்றார் அவரை மடக்கி பிடித்து, அவரது பையை சோதித்த போது, அதில் நகைகள், தங்கக்கட்டிகள் இருந்தன.
அதாவது,1.369 கிலோ எடைக்கொண்ட தங்க கட்டிகள், நகைகள் இருந்தன. இதன்மதிப்பு ரூ.2 கோடியே 39 ஆயிரத்து 356 ஆகும். இந்த தங்கத்துக்கான உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை.
இதையடுத்து, அவரை ஆர்பிஎஃப் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்த போது, அந்தநபர், பெங்களூருவைச் சேர்ந்த அபிஷேக் (45) என்பதும், சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் அனுமதியின்றி தங்க கட்டிகள், தங்கம் ஆபரங்கள் எடுத்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சென்னை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.