சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்
Updated on
1 min read

சென்னை: தாய்​லாந்து நாட்​டிலிருந்து சென்​னைக்கு விமானங்​களில் போதைப் பொருட்​கள் கடத்தி வரு​வது, தொடர்ந்து நடந்து வரு​கிறது.

கடந்த 17-ம் தேதி, சென்னை விமான நிலை​யத்​தில், சுங்​கத் ​துறை​யினரும், மத்​திய போதை தடுப்​புப் பிரி​வினரும் நடத்​திய சோதனை​களில், தாய்​லாந்து நாட்​டிலிருந்​து, சிங்​கப்​பூர் வழி​யாக வந்த பயணி​கள் விமானத்​தில் கடத்தி வரப்​பட்ட, ரூ.11 கோடி மதிப்​புடைய உயர்ரக பதப்​படுத்​தப்​பட்ட ஹைட்​ரோ​போனிக் கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் நேற்று முன்​தின​மும் தாய்​லாந்திலிருந்து போதைப் பொருட்​கள் கடத்தி வரப்படுவதாக சுங்​கத்​துறை​யினருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்து ஏர் இன்​டெலிஜென்ட் அதி​காரி​கள், நள்​ளிர​வில் தாய்​லாந்து நாட்​டில் இருந்து வரும் விமானங்​கள் மட்​டுமின்றி சிங்​கப்​பூர், கோலாலம்​பூர், இலங்கை ஆகிய இடங்​களில் இருந்து வரும் அனைத்து விமானப் பயணி​களை​யும் தீவிர​மாக கண்​காணித்​தனர்.

அப்​போது மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து வந்த பயணி​கள் விமானத்​தில், சென்​னையைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒரு​வர் தாய்​லாந்து நாட்​டுக்கு சுற்​றுலாப் பயணி​யாக சென்​று​விட்​டு, அங்​கிருந்து மலேசியா வழி​யாக சென்​னைக்கு திரும்​பியது சுங்​கத்​துறை அதி​காரி​களுக்கு சந்​தேகத்தை ஏற்​படுத்​தி​யது.

இதையடுத்து அவரது உடமை​களை சோதனை​யிட்​ட​போது பதப்​படுத்​தப்​பட்ட உணவுப் பொருட்​களுக்கு இடையே ரூ.6கோடி மதிப்​புள்ள உயர்ரக கஞ்சா 6 கிலோ இருந்​ததை கண்​டு​பிடித்​தனர்.

இதையடுத்து பயணியை கைது செய்​து, போதைப் பொருளை பறி​முதல் செய்த அதி​காரி​கள், தொடர்ந்து தீவிரமாக வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி கஞ்சா பறிமுதல்
வருவாய்த் துறை அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக லஞ்ச ஒழிப்புத் துறை பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in