ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் செல்போன் திருடிவந்த 4 பேர் கும்பல் கைது; 14 போன்கள் மீட்பு

ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் செல்போன் திருடிவந்த 4 பேர் கும்பல் கைது; 14 போன்கள் மீட்பு
Updated on
1 min read

சென்னை: ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி பெண் பயணி​களை குறி​வைத்து செல்​போன் திருட்​டில் ஈடு​பட்ட 4 பேர் கும்​பல் கைது செய்​யப்​பட்​டுள்​ளது. நுங்​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் தில​கம் (42).

ஓட்​டேரி​யில் உள்ள உறவினர் வீட்​டுக்​குச் செல்ல கடந்த 3-ம் தேதி இரவு, புரசை​வாக்​கம், மோட்​சம் திரையரங்​கம் பேருந்து நிறுத்​தத்​திலிருந்து மாநகர அரசுப் பேருந்​தில் (தடம் எண்​.29ஏ) ஏறி பயணித்​துக் கொண்​டிருந்​தார். சிறிது தூரத்​தில் ஓட்​டேரி பாலம் அருகே அவரது பையில் வைத்​திருந்த, செல்​போனை யாரோ திருடி​விட்​டது தெரிய​வந்​தது.

அவர் கூச்​சலிட்டு செல்​போன் திருடு​போனதை தெரி​வித்​தார். இதையடுத்து பேருந்து சாலை​யோரம் நிறுத்​தப்​பட்​டது. பேருந்​தில் இருந்த மற்ற பயணி​களும் அவர்​களது செல்​போன்​களை சரி​பார்த்​தனர். அப்​போது அதே பேருந்​தில் பயணம் செய்த மேலும் 2 பெண்களின் செல்​போன்​களும் திருடு​போனது தெரிந்​தது.

இதையடுத்​து, பேருந்​தின் ஓட்​டுநர் மற்​றும் நடத்​துநர் இரு​வரும் சேர்ந்து பயணி​கள் உதவி​யுடன் பேருந்​திலிருந்து செல்​போன் திருடர்​கள் வெளி​யேற முடி​யாத​வாறு தடுப்பு அமைத்து பேருந்​தில் இருந்த பயணி​கள் ஒவ்​வொரு​வரிட​மும் சோதனை செய்​தனர். தகவல் அறிந்து ஓட்​டேரி போலீ​ஸாரும் சம்பவ இடம் விரைந்து சோதித்​தனர்.

இதில் செல்​போன் திருட்​டில் ஈடு​பட்ட பெரம்​பூர் முனியப்​பன் தெரு​வைச் சேர்ந்த பழனி (36), அவரது மனைவி ஜமுனா (24), மதுர​வாயல் சீமாத்​தம்​மன் நகரைச் சேர்ந்த குப்​பன் (42), பாலு என்ற சொரி பாலு (39) ஆகியோர் பிடிபட்​டனர்.

விசா​ரணை​யில் இவர்​கள் 4 பேரும் கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி மேலும் சிலருடன் கூட்டு சேர்ந்து பயணி​களோடு பயணி​களாக அரசுப் பேருந்​தில் ஏறி சக பயணி​களின் செல்​போன்​களை திருடிச் செல்​வதும், அந்த செல்​போன்​களை ஓரிடத்​தில் மறைத்து வைத்​துள்​ளதும் தெரிய​வந்​தது.

அதன்​பேரில் அவர்​கள் மறைத்து வைத்​திருந்த 14 செல்​போன்​கள் மீட்​கப்​பட்​டன. பழனி மீது 2 குற்ற வழக்​கு​களும், பாலு மீது 2 கொலை முயற்​சி, திருட்​டு, வழிப்​பறி என 12 குற்ற வழக்​கு​களும், குப்​பன் மீது திருட்​டு, வழிப்​பறி என 14 குற்ற வழக்​கு​களும் உள்​ளது தெரிய​வந்​தது. தலைமறை​வாக உள்ள இவர்​களது கூட்​டாளி​களை போலீ​ஸார்​ தொடர்ந்​த தேடி வருகின்​றனர்​.

ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் செல்போன் திருடிவந்த 4 பேர் கும்பல் கைது; 14 போன்கள் மீட்பு
மதுப்பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் சென்னையில் இன்று முதல் அமல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in