மதுப்பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் சென்னையில் இன்று முதல் அமல்

மதுப்பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் சென்னையில் இன்று முதல் அமல்
Updated on
1 min read

சென்னை: மது​பான பாட்டில்களால் ஏற்​படும் சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​களை தடுக்க, காலி மது​பான பாட்டில்களை திரும்ப பெறும் திட்​டத்தை நடை​முறைப்படுத்த சென்னை உயர்​ நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டது.

அதன்படி நீலகிரியில் முதலில் அமல்படுத்தப்பட்ட இத்திட்​டத்தை தமிழகம் முழு​வதும் செயல்​படுத்த நீதி​மன்​றம் அறி​வுறுத்​தி​யது. தற்​போது 21 மாவட்​டங்​களில் இத்​திட்​டம் அமலில் உள்​ளது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் இன்று (6-ம் தேதி) முதல் இந்த திட்​டம் அமலாக உள்​ளது. இந்த திட்​டத்​தின்படி, மது​பாட்டில்களை வாங்​கும் போது மதுபாட்டில் ஒன்​றுக்கு ரூ.10 கூடு​தலாகப் பெற்று மது அருந்​தி​விட்​டு, காலி மது​பாட்டில்களைத் திரும்ப அதே மது​பானக் கடை​யில் ஒப்​படைக்​கும் போது, ஏற்​க​னவே செலுத்​திய ரூ.10-ஐ திரும்​பப் பெற்​றுக் கொள்​ளலாம்.

இதனால் கூடு​தல் பணிச்​சுமை ஏற்​படு​ம், காலி பாட்​டிகளை சேமிக்க கடைகளில் போதிய இடம் இல்​லை. இந்த திட்​டத்​துக்​காக கூடு​தல் பணி​யாளர்​களை நியமிக்க வேண்டும் என்று டாஸ்​மாக் பணி​யாளர்​கள் கூறு​கின்​றனர்.

மதுப்பாட்டில் திரும்பப்பெறும் திட்டம் சென்னையில் இன்று முதல் அமல்
முதல்வரின் திட்டங்களால் அனைவரும் பயன்பெறுவதை பழனிசாமியால் பொறுக்க முடியவில்லை: அமைச்சர் விமர்சனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in