குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி
Updated on
1 min read

சென்னை: குடிசை மாற்று வாரி​யத்​தில் வீடு வாங்​கித் தரு​வ​தாக கூறி ரூ.33 லட்​சம் மோசடி செய்​தது தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சென்னை புது​வண்​ணாரப்​பேட்​டை, வ.உ.சி. நகரை சேர்ந்​தவர் பேபி.

இவர் புது​வண்​ணாரப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் ஒன்று அளித்​தார். அதில், ‘கொடுங்​கையூரைச் சேர்ந்த வினோத் பாபு என்​பவர் தமிழக குடிசை மாற்று வாரி​யத்​தில் ஓட்​டுந​ராக பணி செய்து வரு​வ​தாக தெரி​வித்​தார்.

மேலும், தண்​டை​யார்​பேட்​டை​யில் உள்ள குடிசை மாற்று வாரி​யத்​தில் வீடு​களை வாங்​கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி​னார். இதை உண்மை என நம்பி நான் உள்பட 11 பேர் ரூ.33 லட்​சம் கொடுத்​தோம். ஆனால், அவர் உறுதி அளித்​த​படி வீடு வாங்​கித் தரவில்​லை. தற்​போது தலைமறை​வாகி விட்​டார்.

எனவே அவரை கைது செய்து எங்​களிடம் மோசடி செய்த பணத்தை மீட்​டுத் தர வேண்​டும் எனப் புகாரில் தெரி​வித்​திருந்​தார். இந்த புகார் தொடர்​பாக போலீ​ஸார் வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் மோசடி
காசோலை மோசடி: இயக்குநர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in