சென்னை | வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேர் கைது

சென்னை | வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: ஆர்​.கே.நகரில் வலி நிவாரண மாத்​திரைகளை விற்​பனை செய்த 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சென்னை ஆர்​.கே. நகரில் போதைப் பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​வ​தாக கிடைத்த தகவலின் பேரில் போலீ​ஸார் நேற்று முன்​தினம் ஐஓசி டீசல் யார்டு அருகே தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, அங்கு சந்​தேகப்​படும்​படி கையில் பைகளு​டன் நின்று கொண்​டிருந்த 4 பேரை பிடித்து விசா​ரணை நடத்​தினர். அவர்​கள் வைத்​திருந்த பையை சோதனை செய்​த​போது, அதில் வலி நிவாரண மாத்​திரைகளை சட்​ட​விரோத விற்​பனைக்​காக மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

பிடிபட்​ட​வர்​கள் ராயப்​பேட்டை கணேசன் (61), காசிமேடு விக்​னேஷ் (28), தண்​டை​யார்​பேட்டை முனியா (19), நேபாளத்தை சேர்ந்த சந்​தோஷ் பரி​யார் (27) என்​பது தெரிய​வந்​தது.

ராயப்​பேட்டை பகு​தி​யில் மருந்து கடை நடத்தி வரும் கணேசன், மற்ற 3 பேரிடம் மாத்​திரைகளை கொடுத்து சட்​ட​விரோத விற்​பனை​யில் ஈடு​பட்​டுள்​ளார். இதையடுத்​து, 4 பேரை​யும் கைது செய்த போலீ​ஸார், அவர்​களிடம் இருந்து 534 வலி நிவாரண மாத்​திரைகளை பறி​முதல்​ செய்​தனர்​.

சென்னை | வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேர் கைது
தலைமைச் செயலக நுழைவு வாயிலில் மனு அளிப்பதற்காக முதல்வரின் வாகனத்தை மறிக்க முயற்சி: தள்ளு முள்ளுவில் இரு காவலர்கள் காயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in