முன்னாள் ஐஐடி விஞ்ஞானியை மிரட்டி ரூ.57 லட்சம் பறிப்பு: டிஜிட்டல் கைது முறையில் மோசடி

முன்னாள் ஐஐடி விஞ்ஞானியை மிரட்டி ரூ.57 லட்சம் பறிப்பு: டிஜிட்டல் கைது முறையில் மோசடி
Updated on
1 min read

சென்னை: பத்மபூஷன் விருது பெற்ற முன்னாள் ஐஐடி ​விஞ்ஞானி​யிடம் சிபிஐ அதி​காரி எனக்​கூறி மிரட்​டி, ரூ.57 லட்​சம் மோசடி செய்​யப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக சைபர் கிரைம் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

சிபிஐ அல்​லது போலீஸ் அதி​காரி​கள் எனக்கூறிக் கொண்டு கும்​பல் ஒன்று சிலருக்கு அழைப்பு விடுக்​கும். எதிர் முனை​யில் பேசுவோரிடம், சட்ட விரோத செயல்​களில் அவர்​களுக்கு தொடர்பு இருப்​பது தெரிய​வந்​துள்​ள​தாகக் கூறி மிரட்​டு​வார்​கள்.

பின்​னர் அவர்​களை டிஜிட்​டல் முறை​யில் கைது செய்​துள்​ள​தாக​வும், அவர்​களின் வங்​கிக் கணக்​கில் உள்ள அனைத்து பணத்​தை​யும் தாங்​கள் கூறும் வங்​கிக் கணக்​குக்கு மாற்​று​மாறும், நிரப​ராதி எனத் தெரிந்​தால், பணத்தை மீண்​டும் அனுப்​பி​விடு​வ​தாக​வும், அது​வரை வெளியே செல்​லக்​கூ​டாது என்​றும் மிரட்​டு​வார்​கள்.

இவர்​கள் சைபர் மோசடி கும்​பல் என தெரி​யாமல், மிரட்​டலுக்கு உள்​ளானவர்​கள் தங்​களை நல்​ல​வர்​கள் என நிரூபிக்க பணத்தை அனுப்பி ஏமாற்​றமடை​வார்​கள். இது​போன்று பலர் கோடிக்​கணக்​கான பணத்தை இழந்​துள்​ளனர்.

அந்த வகை​யில் சென்னை ஐஐடி-​யில் பணி​யாற்றி ஓய்வு பெற்ற 77 வயது விஞ்ஞானி​யான ராம​சாமி என்​பவரிடம் அவரது செல்​போன் எண் சட்​ட​விரோத செயல்​களுக்கு பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது என்​று, சிபிஐ அதி​காரி பேசுவது​போல பேசி, சைபர் மோசடி கும்​பல் ரூ.57 லட்​சத்தை பறித்​துள்​ளது.

இவர், மதிப்​புமிக்க பத்​மபூஷன் விருதை​ பெற்​றுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. புகாரின்​பேரில் இதுகுறித்து சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசாரித்து வருகின்றனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த கும்பல் கம்போடியாவிலிருந்து செயல்படுவது தெரியவந்துள்ளது. அவர்களை கைதுசெய்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் ஐஐடி விஞ்ஞானியை மிரட்டி ரூ.57 லட்சம் பறிப்பு: டிஜிட்டல் கைது முறையில் மோசடி
மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் நாளை ஊதிய ஒப்பந்த பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in