ரூ.1.50 கோடி நகைகளை விட்டுச் சென்ற வழக்கில் தனியார் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் சிக்கினார்

திருடிய நகைகளை மீண்டும் வங்கியில் வைக்க முயன்றது அம்பலம்
ரூ.1.50 கோடி நகைகளை விட்டுச் சென்ற வழக்கில் தனியார் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் சிக்கினார்
Updated on
1 min read

சென்னை: வேளச்​சேரி வங்​கி​யில் ரூ.1.50 கோடி தங்க நகைகளை விட்​டுச் சென்ற வழக்​கில் திடீர் திருப்​ப​மாக, முன்​னாள் பெண் வங்கி மேலா​ளரே நகைகளைத் திருடி மீண்​டும் வங்​கி​யில் வைக்க முயன்​றது தெரிய​வந்​துள்​ளது.

சென்னை வேளச்​சேரி 100 அடி சாலை​யில் தனியார் வங்கி ஒன்று செயல்​படு​கிறது. இந்த வங்​கிக்கு கடந்த 5-ம் தேதி பர்தா அணிந்த பெண் ஒரு​வர், வங்​கிக் கணக்கு தொடங்க வேண்​டும் என்று கேட்​டுள்ளார்.

சம்பந்​தப்​பட்ட அதி​காரி​கள் வெளியே சென்​றுள்​ள​தால், சிறிது நேரம் காத்​திருக்​கும்​படி ஊழியர்​கள் தெரி​வித்​தனர். இதையடுத்​து, வங்​கிக் கணக்கு தொடங்க தேவை​யான ஆவணங்​களை எடுத்து வரு​வ​தாகக்கூறி அங்​கிருந்து சென்ற பெண் திரும்பி வரவில்​லை.

அந்த பெண் அமர்ந்​திருந்த இருக்​கை​யில் ஒரு பர்ஸ் இருந்தது. அந்த பர்சை திறந்து பார்த்த போது, தங்க பிஸ்​கட், தங்க வளை​யல் உட்பட 1.256 கிலோ தங்கம் (ரூ.1.50 கோடி மதிப்​பு) இருந்​தது.

அதை எடுத்து பத்​திரப்​படுத்​திய வங்கி அதி​காரி​கள், உடனடி​யாக தலைமை அலு​வல​கத்​துக்கு தகவல் தெரி​வித்​தனர். இதையடுத்​து, வங்​கி​யின் தணிக்கை குழு​வினர் வந்து சம்​பந்​தப்​பட்ட தங்க பிஸ்​கெட் மற்​றும் வளை​யல்​களை ஆய்வு செய்​த​போது அனைத்​தும் தங்​கம் என தெரிந்​தது.

நேற்று முன்​தினம் வரை தங்​கத்தை விட்​டுச் சென்ற பெண் திரும்ப வராத​தால் சந்​தேகம் அடைந்த வங்கி அதி​காரி​கள் வேளச்​சேரி காவல் நிலை​யத்​தில் தங்​கத்தை ஒப்​படைத்து புகார் அளித்​தனர்.

இதையடுத்து போலீ​ஸார் சிசிடிவி கேமரா பதி​வில் கிடைத்த அந்த பெண் உருவ அடை​யாளத்தை வைத்து அந்த பெண்ணை தேடினர். இதில் நகையை விட்​டுச் சென்​றது அதே வங்​கி​யில் கடந்த ஓராண்​டுக்கு முன்பு மேலா​ள​ராகப் பணி​யாற்​றிய பத்​மப்​பிரியா (37) என்​கிற பத்​மகு​மாரி என்​பது தெரிய வந்​தது.

அவரை காவல் நிலை​யம் அழைத்து வந்து விசா​ரித்து வரு​கின்​றனர். கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கடன் கொடுத்​தவர்​கள் தொடர்ந்து பத்​மபிரி​யா​வுக்கு நெருக்​கடி கொடுத்​துள்​ளனர். இதையடுத்​து, அவர் தான் பணி​யாற்​றிய வங்கி லாக்​கரில் வேறொரு நபரின் 250 கிராம் நகைகளை திருடியுள்​ளார்.

இந்த வழக்கில் கைதான அவர், ஒரு வாரத்​துக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்​தார். இதே​போல் அவர் வேறு ஒரு பெண்​ணின் லாக்​கரில் இருந்து ஒன்றே கால் கிலோ நகைகளை திருடி வீட்​டில் வைத்​திருந்த நிலை​யில், இந்த நகை திருட்டு தொடர்​பாக மீண்​டும் கைது செய்​யப்​பட்டு விடு​வோமோ என பயந்​து, பர்தா அணிந்து வந்​து, எப்​படி​யா​வது அந்த லாக்​கரில் நகையை வைத்​து​விடலாம் என முயற்சி செய்​த​தாகவும், அது முடி​யாத​தால், நகைப் பையை விட்​டுச் சென்​றதும் தெரிய​வந்​தது.

ரூ.1.50 கோடி நகைகளை விட்டுச் சென்ற வழக்கில் தனியார் வங்கியின் முன்னாள் பெண் மேலாளர் சிக்கினார்
தவெகவுக்கு மோதிரம் சின்னம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in