குறைந்த விலையில் தங்கம் என ரூ.20 கோடி மோசடி செய்த பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

ஷீலா மேரி, பிரபுமணி

ஷீலா மேரி, பிரபுமணி

Updated on
1 min read

சென்னை: குறைந்த விலை​யில் தங்கம் என ரூ.20 கோடி வரை மோசடி நடை​பெற்ற விவ​காரத்​தில் பெண் காவல் ஆய்​வாளர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

ராயபுரம் மகளிர் காவல் நிலை​யத்​தில் ஆய்​வாள​ராகப் பணி​யாற்​றிய​வர் ஷீலா மேரி. இவர் தனது உறவின​ரான பிரபு மணி மூல​மாக ஒரு நிறு​வனத்தை தொடங்கி அதன் மூலம் தங்​கத்​தில் முதலீடு செய்​தால் அதிக லாபம் சம்​பா​திக்​கலாம், குறைந்த விலை​யில் தங்க காசுகள் வாங்​கலாம், வீட்டு மனை​கள் குறைந்த விலை​யில் வாங்​கித் தரு​கிறோம் என பல்​வேறு முதலீட்டு திட்​டங்​களை அறி​முகம் செய்​துள்​ளார்.

கடந்த 2023 மற்​றும் 2024-ம் ஆண்டு வரை 200-க்​கும் மேற்​பட்​டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறு​வனத்​தில் முதலீடு செய்​துள்​ளனர். பிரபு மணி பெரும்​பாலும் ஆய்​வாளர் ஷீலா மேரி​யின் காவல்​துறை வாக​னத்​திலேயே வைத்​து, மக்​கள​வைத் தேர்​தல் நேரத்​தில் தங்​கக் காசுகளை வழங்​கி​யுள்​ளார்.

இதனால் நம்​பிக்கை ஏற்​பட்டு மேலும் நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் முதலீடு செய்​துள்​ளனர். குறிப்​பாக போலீ​ஸாரும், போலீஸ் அதி​காரி​கள் பலரும் கோடிக்​கணக்​கில் பணத்தை முதலீடு செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், இந்​நிறு​வனத்தை 2024 இறு​தி​யில் மூடி​விட்டு பிரபுமணி தலைமறை​வாகி​விட்​டார். இவரிடம் முதலீடு செய்து ஏமாற்​றப்​பட்​ட​வர்​கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தனர்.

மொத்​தம் ரூ.20 கோடி வரை இழந்​துள்​ள​தாக அவர்​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து முதல் கட்​ட​மாக பிரபுமணி மீது போலீ​ஸார் வழக்​குப் பதிந்​தனர். தொடர்ந்து அவர் கைது செய்​யப்​பட்​டார்.

பெண் காவல் ஆய்​வாளர் ஷீலா மேரி​யும் மோசடிக்கு உடந்​தை​யாக இருந்​தது உறுதி செய்​யப்​பட்​ட​தால், அவர் மீதும் பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இந்​நிலை​யில், தங்க நகை மோசடி வழக்கு விவ​காரத்​தில் சிக்​கிய காவல் ஆய்​வாளர் ஷீலா மேரியை பணி​யிடை நீக்​கம் செய்து சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​விட்​டுள்​ளார்.

<div class="paragraphs"><p>ஷீலா மேரி,&nbsp;பிரபுமணி</p></div>
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in