நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி காயம்

நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி காயம்
Updated on
1 min read

கரூர்: கட​வூர் அருகே அடை​யாளம் தெரி​யாத நபர் நாட்​டுத் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில், குண்டு பாய்ந்து விவ​சாயி காயமடைந்​தார்.

கரூர் மாவட்டம் கடவூர் வட்​டம் சேவாப்​பூரை அடுத்த வளை​யபட்​டியைச் சேர்ந்​தவர் கருணை​கிரி. விவ​சா​யி. நேற்று முன்​தினம் இரவு தனது தோட்​டத்து வீட்​டுக்கு இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது, அடை​யாளம் தெரி​யாத ஒரு​வர் நாட்​டுத் துப்​பாக்​கி​யால் சுட்​டதில் இடுப்​பு, முதுகு ஆகியஇடங்​களில் 10 பால்​ரஸ் குண்​டு​கள் பாய்ந்​தன. இதில் காயமடைந்த அவர், திண்​டுக்​கல் அரசு மருத்​து​வமனை​யில் சேர்க்​கப்​பட்​டார். இதுகுறித்து பால​விடுதி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி காயம்
சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: 2 பேர் கைது - கோவை அதிர்ச்சியும், காவல் துறை நடவடிக்கையும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in