சென்னை | ஆன்லைனின் வாங்கிய கடனை அடைக்க மூதாட்டியிடம் நகை பறித்த இன்ஜினீயர் கைது

தமிழ்​வாணன்

தமிழ்​வாணன்

Updated on
1 min read

சென்னை: மடிப்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் ஜெய (61). கடந்த 29-ம் தேதி மாலை, கர்ப்​பிணி மரு​மகளு​டன் வீட்​டினருகே தில​கர் அவென்யூ 1-வது மெயின் ரோடு வழி​யாக நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது, பின் தொடர்ந்து வந்த, வழிப்​பறி கொள்​ளை​யன் ஜெய கழுத்​தில் அணிந்​திருந்த 2 பவுன் தங்க தாலிச் செயினை பறித்​துக் கொண்டு தப்​பியோடி​னார். இது தொடர்​பாக அவர் மடிப்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், ஜெயஸ்ரீயிடம் நகை பறிப்​பில் ஈடு​பட்​டது மடிப்​பாக்​கம், பஜார் மெயின் ரோடு பகு​தி​யைச் சேர்ந்த தமிழ்​வாணன் (23) என தெரிய வந்​தது.

தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில், கள்​ளக்​குறிச்​சி​யைச் சேர்ந்த தமிழ்​வாணன் பொறி​யியல் படித்​து, சென்​னை​யில் தங்கி தனி​யார் கட்​டு​மான நிறு​வனத்​தில் இன்​ஜினீய​ராக வேலை செய்து வரு​வதும், ஆன்​லைனில் வாங்​கிய கடனை திரும்ப செலுத்த பணம் தேவைப்​பட்​ட​தால், நகைபறிப்​பில் ஈடு​பட்​டதும் தெரிய வந்​தது. இதையடுத்​து, அவர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

<div class="paragraphs"><p>தமிழ்​வாணன்</p></div>
வடபழனி முருகன் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் கடும் அவதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in