ஆலங்குளம் அருகே திருமண நிகழ்ச்சியில் 6 பேரை வெட்டிய சம்பவத்தில் சிறார்கள் உள்பட 8 பேர் கைது

ஆலங்குளம் அருகே திருமண நிகழ்ச்சியில் 6 பேரை வெட்டிய சம்பவத்தில் சிறார்கள் உள்பட 8 பேர் கைது
Updated on
1 min read

தென்காசி: ஆலங்​குளம் அருகே திருமண நிகழ்ச்​சி​யில் புகுந்து 6 பேரை வெட்​டி​விட்டு தப்​பிச் சென்ற சம்​பவத்​தில் 8 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

ஆலங்​குளம் அருகே நேற்​று ​முன்​தினம் நெட்​டூரில் நடந்த திருமண விழா​வில் புகுந்த கும்​பல் அரி​வாள், கத்தி போன்ற ஆயுதங்​களால் அங்கு இருந்​தவர்​களை சரமாரி​யாக வெட்​டியது. இதில், 6 பேர் பலத்த காயமடைந்​தனர்.

இந்த தாக்​குதலில் ஈடு​பட்​ட​வர்​களை கைது செய்​யக்​கோரி நெட்​டூரில் ​மக்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். தாக்​குதல் சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை பிடிக்க மாவட்​டம் முழு​வதும் வாகன சோதனை தீவிரப்​படுத்​தப்​பட்​டது. இதில் 3 சிறு​வர்​கள் உள்பட 8 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதுகுறித்து தென்​காசி மாவட்ட காவல்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: திருநெல்​வேலி பிரம்​மதேசம் பகு​தி​யில் மணி​கண்​டன் என்​பவரை கடந்த 28-ம் தேதி இருசக்கர வாக​னங்​களில் வந்த கும்​பல் வழிமறித்து பணம் கேட்டு மிரட்​டி, அவரது இடது கை விரலில் காயம் ஏற்​படுத்​தி​யது. அதே கும்​பல், வாகைகுளம் பகு​தி​யில் உள்ள சிற்​பக்​கலை தொழிற்​கூட உரிமை​யாளர் செல்வ கணேசன் என்​பவரை மிரட்டி பணம் பறிக்​கும் நோக்​கத்​தில் சென்​றது. அங்கு அவர் இல்​லாத​தால், அங்​கிருந்த பொருட்​களை சேதப்​படுத்​தி, பணி​யாளர் செல்​போனை பறித்​துச் சென்​றனர். வழி​யில் மேலும் ஒரு​வரை தாக்கினர்.

இதனைத் தொடர்ந்​து, 29-ம் தேதி நெட்​டூர் பகு​தி​யில், முன்​விரோதம் தொடர்பான தகராறின் காரண​மாக இருசக்கர வாக​னங்​களில் வந்த அதே கும்​பல் 6 பேரை தாக்​கியது. அங்​கிருந்து தப்​பிச் செல்​லும்​போது மானூர் அருகே தெற்​குப்​பட்டி பகு​தி​யில் அதிவேக​மாகச் சென்​றுள்​ளனர். இதை தட்​டிக் கேட்ட முபாரக், அப்​துல் ரஹு​மான் ஆகியோரையும் தாக்​கி​விட்டு தப்​பினர்.

இந்த தொடர் தாக்​குதல் சம்​பவங்​கள் குறித்து அம்​பாச​முத்​திரம், ஆலங்​குளம், மானூர் காவல் நிலை​யங்​களில் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்நிலையில் இந்த தாக்​குதல் சம்​பவங்​களில் தொடர்​புடைய 3 சிறார்​கள் உள்பட 8 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். தலைமறை​வாக உள்ள மேலும் சிலரை பிடிக்க போலீஸார் தரப்பில் தீவிர நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆலங்குளம் அருகே திருமண நிகழ்ச்சியில் 6 பேரை வெட்டிய சம்பவத்தில் சிறார்கள் உள்பட 8 பேர் கைது
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in