எஸ்ஐஆர் படிவம் நிரப்புவதாக ஓடிபி எண் கேட்டால் தராதீர் - சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை

எஸ்ஐஆர் படிவம் நிரப்புவதாக ஓடிபி எண் கேட்டால் தராதீர் - சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை
Updated on
1 min read

புதுச்சேரி: எஸ்ஐஆர் படிவம் நிரப்புவது சம்மந்தமாக இணையவழி குற்றவாளிகள் கால் செய்து ஓடிபி எண்ணை கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று புதுச்சேரி இணையவழி போலீஸார் எச்சரித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத் தின் அறிவுறுத்தலின் பேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி புதுச்சேரி யில் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலை பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் பொதுமக்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு படிவம் நிரப்புவது சம்மந்தமாக பேசுகிறோம், அதற்கு உங்கள் தொலைபேசியில் ஓடிபி எண் வந்திருக்கும் அதை கூறுங்கள் என்று கேட்கின்றனர்.

அவ்வாறு கேட்டால் ஓடிபி எண்ணை பகிர வேண்டாம். ‘எங்களுடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ) நேரிடையாக சென்று கொடுக்கிறோம்’ என்று கூறி விடுங்கள்.

உங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் உங்களுக்கு அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது சைபர் க்ரைம் காவல் நிலையத்திலோ அல்லது 1930 மூலமாகவோ தொடர்புகொண்டு புகார் அளிக்கும் படியும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் உங்கள் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர், அவரின் தொலைப் பேசி எண் ஆகியவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவர்களை தொடர்பு கொண்டு சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதோடு, இணைய வழி மோசடிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

அதோடு இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தை 1930 மற்றும் 0413 - 2276144, 94892 05246 மற்றும் ஆகிய இலவச எண்களிலும், ‘cybercell-police@py.gov.in’ மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க ‘www.cybercrime.gov.in’ ஐ பயன்படுத்தவும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in