வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு கஞ்சா கும்பலுக்கு போலீஸ் வலை

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு கஞ்சா கும்பலுக்கு போலீஸ் வலை
Updated on
1 min read

சென்னை: போரூரைச் சேர்ந்​தவர் ஆம்​புலன்ஸ் ஓட்​டுநர் பிர​பாகரன். திரு​மண​மாகி மனைவி குழந்​தைகளு​டன் வசித்து வரு​கிறார். இவர் நேற்று முன்​தினம் இரவு நொளம்​பூர் வேணுகோ​பால் தெரு​வில் உள்ள மாமி​யார் வீட்​டுக்​குச் சென்​றுள்​ளார்.

அப்​போது மாமி​யார் வீட்​டின் அருகே காலி இடத்​தில் சிலர் கஞ்சா புகைத்​த​வாறு, மது அருந்​திக் கொண்​டிருப்​ப​தைப் பார்த்த பிர​பாகரன் அவர்​களை அங்​கிருந்து துரத்​தி​விட்​டார். தொடர்ந்து மாமி​யார் வீட்​டுக்கு வெளியே அவரது மனை​வி​யுடன் பேசிக் கொண்​டிருந்​தார்.

அப்​போது துரத்​தப்​பட்ட கஞ்சா போதை இளைஞர்​கள் திடீரென அங்கு வந்து பிர​பாகரனுடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்டு அவரை சரமாரி​யாக தாக்​கினர். அக்​கம் பக்​கத்​தில் இருந்​தவர்​கள் கூடிய​தால் போதை இளைஞர்​கள் அங்​கிருந்து தப்​பிச் சென்​றனர்.

அன்று இரவு பிர​பாகரன் மாமி​யார் வீட்​டிலேயே தங்​கி​னார். இந்​நிலை​யில் நள்​ளிரவு அதே கும்​பல் மீண்​டும் அங்கு வந்​தது. 2 நாட்டு வெடிகுண்டு​களை பிர​பாகரன் மாமி​யார் வீட்​டின் மீது வீசி​விட்டு தப்​பியது. இந்த நாட்டு வெடிகுண்டுகள் வீட்​டுச் சுவர் மற்​றும் ஜன்​னல் கண்​ணாடி​யில் பட்டு வெடித்​துச் சிதறி தீப்​பற்றி எரிந்​தது.

தகவலறிந்து நொளம்​பூர் போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து விசா​ரணை மேற்​கொண்​டனர். தொடர்ந்து வழக்​குப் பதிவு செய்து அங்​கிருந்த கண்​காணிப்பு கேமரா பதிவு​களை கைப்​பற்றி ஆய்வு செய்​தனர்.

இதில் முகப்​பேர் மேற்​கு, பஜனை கோயில் தெருவை சேர்ந்த மார்ட்​டின் (22), நொளம்​பூரைச் சேர்ந்த 15 வயது சிறு​வன் உட்பட 5 பேர் கொண்ட கும்​பல் இந்த சம்​பவத்​தில் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது. அவர்​களை தனிப்​படை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு கஞ்சா கும்பலுக்கு போலீஸ் வலை
டெலிவரி ஊழியரிடம் கத்தி முனையில் ‘ஜிபே’ மூலம் பணம் பறித்த இருவர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in