எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாதது தொடர்பாக பெண் வழக்கறிஞர், டிக்கெட் பரிசோதகர் மோதல்

இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை
டிக்கெட் இல்லாதது தொடர்பாக, மோதலில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர், பெண் டிக்கெட் பரிசோதகர்.

டிக்கெட் இல்லாதது தொடர்பாக, மோதலில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர், பெண் டிக்கெட் பரிசோதகர்.

Updated on
1 min read

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் இல்லாதது தொடர்பாக பெண் வழக்கறிஞர், டிக்கெட் பரிசோதகர் மோதிக் கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக, இருவர் மீதும் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்​னை, மாங்​காட்​டைச் சேர்ந்த மோகனா உயர்​நீ​தி​மன்ற வழக்​கறிஞர். இவர் நேற்​று​முன்​தினம், கடற்​கரை நோக்கி செல்​லும் மின்​சார ரயி​லில் பயணித்​த​தாக​வும், எழும்பூர் ரயில் நிலை​யத்​தில் இறங்​கிய​தாக​வும் கூறப்​படு​கிறது.

இவரிடம் ரயில்வே பெண் டிக்​கெட் பரிசோதகர் ஷல்மா பேகம் டிக்​கெட் கேட்​டுள்​ளார். அதற்கு உறவினரை வழியனுப்ப வந்​த​தாக மோகனா தெரி​வித்​ததுள்​ளார். இதையடுத்​து, நடைமேடை டிக்​கெட் காண்​பிக்​கும்​படி ஷல்மா பேகம் கேட்க, மோகனாவிடம் டிக்​கெட் இல்​லாத​தால், இரு​வருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

வாக்​கு​வாதம் முற்​றியதையடுத்​து, டிக்​கெட் பரிசோதகர்​களின் அறைக்கு வழக்​கறிஞர் மோக​னாவை அழைத்​துச் சென்று விசா​ரித்​தனர்.

அப்​போது, இரு​வருக்​கும் இடையே மீண்​டும் வாக்​கு​வாதம் ஏற்​பட்டு, டிக்​கெட் பரிசோதகரின் கன்​னத்​தில் மோகனா அறைந்​தார். பதி​லுக்கு டிக்​கெட் பரிசோதகரும் மோக​னாவை தாக்​கி​னார்.

இரு​வரும் ஒரு​வரை ஒரு​வர் தாக்கி கொண்​டனர். இந்த மோதல் சம்​பவம் தொடர்​பாக, ரயில்வே போலீஸார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் வழக்கறிஞரும், பெண் டிக்​கெட் பரிசோதகரும் மோதிக்​கொண்ட காட்சி சமூக ஊடகங்​களில் வைரலானது.

<div class="paragraphs"><p>டிக்கெட் இல்லாதது தொடர்பாக, மோதலில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர், பெண் டிக்கெட் பரிசோதகர். </p></div>
இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பேன்: அமெரிக்காவில் அண்ணாமலை உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in