மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்லூரி தாளாளர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்லூரி தாளாளர் கைது
Updated on
1 min read

தென்காசி: தென்​காசி​யில் மாணவிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்​து​வந்த கல்​லூரி தாளாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். தமிழக முதல்​வரின் தனிப்​பிரிவுக்கு அனுப்​பிய புகாரின்​பேரில் போலீ​ஸார் இந்த அதிரடி நடவடிக்​கையை எடுத்​துள்​ளனர்.

தென்​காசி மாவட்​டம், செங்​கோட்டை அருகே உள்ள மீனாட்​சிபுரம் பகு​தி​யில் தனி​யார் பாராமெடிக்​கல் கல்​லூரி செயல்​பட்டு வரு​கிறது. இந்த கல்​லூரி​யில் தமிழகம் மற்​றும் கேரளாவைச் சேர்ந்த ஏராள​மான மாணவ, மாணவி​கள் பயின்று வரு​கிறார்​கள். இக்​கல்​லூரி​யில் கடந்த 2024-ம் ஆண்டு பயின்ற கேரளாவை சேர்ந்த மாணவி ஒரு​வருக்​கு, கல்​லூரி​யின் தாளாள​ரான பினு என்​பவர், பல்​வேறு வகை​களில் பாலியல் தொந்​தரவு கொடுத்து வந்​துள்​ளார்.

அந்த மாணவி கல்​லூரி​யில் உள்ள விடு​தி​யில் தங்கி பயின்று வந்​த​போது, தனது ஆண் நண்​பருடன் செல்​போனில் பேசி​ய​தாக கூறப்​படு​கிறது. இதை தெரிந்து கொண்ட பினு, அந்த மாண​வியை மிரட்​டி, பாலியல் தொல்லை அளித்து வந்​துள்​ளார். இந்​நிலை​யில், அந்த மாணவி கல்​லூரிப் படிப்பை முடித்து 2 ஆண்​டு​கள் கடந்த பின்​னரும், பினு தொடர்ந்து தொந்​தரவு கொடுத்து வந்​துள்​ளார்.

மனவேதனை அடைந்த அந்த மாண​வி, தனது பெற்​றோரிடம் தெரி​வித்​துள்​ளார். அவரது பெற்​றோர், தமிழக முதல்​வரின் தனிப்​பிரிவுக்கு புகார் மனு ஒன்றை அனுப்​பினர்.

அதன் அடிப்​படை​யில், தென்​காசி மகளிர் காவல் நிலைய போலீ​ஸார், கல்​லூரி தாளாளர் பினு மீது, பெண் வன்​கொடுமை சட்​டம் உள்​ளிட்ட 7 பிரிவு​களின் கீழ் வழக்குப் பதிவு செய்​து, அவரை கைது செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், காவல் நிலை​யத்​தில் வைத்து தனக்கு நெஞ்​சுவலிப்​ப​தாக பினு தெரி​வித்​த​தால், அவரை, தென்​காசி அரசு மருத்​து​வ​மனை​யில் போலீ​ஸார் அனு​ம​தித்​துள்​ளனர்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கல்லூரி தாளாளர் கைது
“வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் தப்ப முடியாது” - புதிய செல்ஃபி வீடியோவில் பிரதமர் மோடி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in