இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தியதால் மோதல்: வீடு புகுந்து சூறையாடிய அக்கா - தம்பி உட்பட 7 பேர் கைது

இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தியதால் மோதல்: வீடு புகுந்து  சூறையாடிய அக்கா - தம்பி உட்பட 7 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: இருசக்கர வாக​னத்தை அடுக்​கு ​மாடிக் குடி​யிருப்​பின் வழிப்​பாதை​யில் நிறுத்​திய விவ​காரத்​தில் இரு தரப்​பினரிடையே மோதல் ஏற்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக வீடு புகுந்து பொருட்​களை சூறை​யாடிய 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

சாலிகி​ராமம், அபு​சாலி தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பின் முதல் தளத்​தில் சுவர்​ணலட்​சுமி (42) என்​பவர் குடும்​பத்​துடன் வசிக்​கிறார். கடந்த 28-ம் தேதி மதி​யம், அவர்​களது குடி​யிருப்​பின் கேட் முன்​னால் அடை​யாளம் தெரி​யாத நபர் அவரது இருசக்கர வாக​னத்தை வழி​யில் நிறுத்​தி​விட்டு சென்​றார். இதனால் யாரும் குடி​யிருப்​புக்​குள் செல்ல முடி​யாத நிலை ஏற்​பட்​டது.

சங்கிலி போட்டு பூட்டினர்

இதனால் கோபம் அடைந்த சுவர்​ணலட்​சுமி சம்​பந்​தப்​பட்ட வாக​னத்தை இரும்​புச் சங்​கி​லி​யால் பூட்​டி​னார். சிறிது நேரம் கழித்து 2 பெண்​கள் வந்​து, ‘யார் எங்​கள் வாக​னத்தை சங்​கி​லி​யால் பூட்டி வைத்​துள்​ளது’ எனக் கேட்​ட​போது, சுவர்​ணலட்​சுமி​யும் அவரது தாயாரும் ‘நாங்​கள்​தான் பூட்​டினோம், இப்​படி வாசலில் நிறுத்​தி​னால் நாங்​கள் எப்​படி செல்​வது, இனிமேல் இங்கு வாக​னத்தை நிறுத்​தாதீர்​கள்’ எனக்​கூறி சங்​கி​லி​யின் பூட்​டைத் திறக்க சாவியைக் கொடுத்​தனர்.

ஆனால் அவர்​கள் வாக்​கு​வாதம் செய்​தனர். இதில் இரு தரப்​பினரிடையே கைகலப்பு ஏற்​பட்​டது. பின்​னர் அங்​கிருந்து கலைந்து சென்​றனர். சிறிது நேரத்​தில் தகராறு செய்த பெண்​ணின் தம்பி உட்பட சிலர் சுவர்​ணலட்​சுமி​யின் வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்​து, கிரிக்​கெட் மட்டை மற்​றும் கம்​பால் வீட்​டிலிருந்த டிவி, கண்​ணாடி உள்​ளிட்ட பொருட்​களை உடைத்​து, வீட்​டிலிருந்த பொருட்​களை சூறை​யாடி​விட்​டுத் தப்​பினர்.

இது தொடர்​பாக சுவர்​ணலட்​சுமி விரு​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து வீடு புகுந்து சூறை​யாடிய திரு​வல்​லிக்​கேணி நடுக்​குப்​பத்​தைச் சேர்ந்த ஷர்​மிளா (25), அவரது தம்பி பவேஷ் (23), அயனாவரம் புதுநகர் ஆனந்த் (36), வில்​லி​வாக்​கம் சிட்கோ நகர் தீபக் (20), கொரட்​டூரைச் சேர்ந்த முத்​துப்​பாண்​டியன் (27), வில்​லி​வாக்​கம் ஐகோர்ட் காலனி பலராம் (36), கொரட்​டூர் எம்​ஜிஆர் தெரு​வைச் சேர்ந்த ராஜு (28) ஆகிய 7 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்​.

இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தியதால் மோதல்: வீடு புகுந்து  சூறையாடிய அக்கா - தம்பி உட்பட 7 பேர் கைது
புழுதிவாக்கம் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 பேர் மீட்பு: ரயில்வே அவசர எண் இயங்கவில்லை என குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in