ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் இடையே மோதல்: புழல் சிறை அதிகாரி மீதும் தாக்குதல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் இடையே மோதல்: புழல் சிறை அதிகாரி மீதும் தாக்குதல்
Updated on
1 min read

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்​கில் கைதானவர்​களுக்கு இடையே, புழல் சிறை​யில் மோதல் ஏற்​பட்​டுள்​ளது. தடுக்க முயன்ற சிறைத்​துறை அதி​காரி மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024 ஜூலை 5-ம் தேதி பெரம்​பூரில் உள்ள அவரது வீட்​டருகே வெட்டிக் கொலை செய்​யப்​பட்​டார்.

இந்த வழக்​கில் ஆயுள்சிறைக் கைதி​யாக இருந்த ரவுடி நாகேந்திரன், இவரது மகன் அஸ்​வத்தாமன், மற்​றொரு தாதா​வான மறைந்த ஆற்​காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு உட்பட 25-க்கும் மேற்​பட்​டோர் அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர்.

இவர்​களில் ரவுடி திரு​வேங்​கடம் போலீ​ஸாரின் என்​க​வுன்ட்​டரில் உயி​ரிழந்​தார். உடல் நலக்​குறைவு காரண​மாக ரவுடி நாகேந்​திரன் அண்​மை​யில் இறந்​தார். அஸ்​வத்​தாமன் உள்​ளிட்ட 12 பேர் ஒரு மாதத்​துக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்​தனர்.

பொன்னை பாலு, அவரது மைத்​துனர் மணிவண்​ணன், வெடிகுண்டு சப்​ளை​யர் எனக் கூறப்​படும் ரவுடி புதூர் அப்பு உள்​ளிட்​டோர் ஜாமீன் கிடைக்​காமல் புழல் சிறை உயர் பாது​காப்​புப் பிரி​விலேயே உள்​ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்​கில் கைதாகி சிறை​யில் இருக்​கும் மற்​றவர்​களை ஜாமீனில் எடுப்​பது தொடர்​பான விவ​காரத்​தில் பொன்னை பாலு, அவரது மைத்​துனர் மணிவண்​ணன் ஆகியோர் ஒரு தரப்​பாக​வும், வெடிகுண்டு சப்​ளை​யர் புதூர் அப்பு தலை​மை​யில் மற்​றொரு தரப்​பாக​வும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர்.

புழல் போலீஸ் விசாரணை: பின்​னர் இரு தரப்​பினரும் கைகளாலும், உருட்​டுக் கட்​டைகளாலும் தாக்​கிக் கொண்​டுள்​ளனர். அங்கு பணி​யில் இருந்த சிறைத்​துறை அதி​காரி திரு​நாவுக்​கரசு மற்​றும் சிறைக் காவலர்​கள் இரு தரப்​பினரை​யும் சமா​தானப்​படுத்த முயன்​றனர். அப்​போது திரு​நாவுக்​கரசு மீதும் தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த மோதல் சம்​பவம் மற்​றும் சிறை அதி​காரி மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல் சம்​பவம் தொடர்​பாக சிறைக் கண்​காணிப்​பாளர் கிருஷ்ண​ராஜ் புழல் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதற்​கட்ட விசா​ரணை​யில் வெடிகுண்​டு​கள் சப்ளை செய்த அப்புவுக்கு பேசி​யபடி பணம் கொடுக்க வில்​லை​யாம்.

இது தவிர ஜாமீனில் எடுக்​க​வும் ஆற்​காடு சுரேஷ் தரப்பு உதவ​வில்லை எனக் கூறப்​படு​கிறது. இதனால்​தான் ஆற்​காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு​வுக்​கும் - அப்​புவுக்​கும் தகராறு ஏற்​பட்​டுள்​ளது எனத் தெரிய​வந்​துள்​ளது. தொடர்ந்​து வி​சா​ரணை நடைபெற்​று வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் இடையே மோதல்: புழல் சிறை அதிகாரி மீதும் தாக்குதல்
பெண் விஏஓ உயிரிழப்பு வழக்கில் திருப்பம்: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in