அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார மேலாளர் மீது வன்கொடுமை வழக்கு

பட்டியலின பெண் சமையல் உதவியாளர் பணிநீக்கம்
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார மேலாளர் மீது வன்கொடுமை வழக்கு
Updated on
1 min read

கரூர்: தோகைமலை அருகே அரசுப் பள்ளியின் பட்டியலின பெண் சமையல் உதவி​யாளர் பணி நீக்​கம் செய்​யப்​பட்ட சம்​பவத்​தில், பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார மேலா​ளர் மீது வன்​கொடுமை தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

கரூர் மாவட்​டம் தோகை மலையை அடுத்த பொன்​னம்​பட்​டியைச் சேர்ந்​தவர் ரங்​க​ராஜ் மனைவி நிரோஷா(35). பட்டியலினத்தை சேர்ந்த இவர், சின்​னரெட்​டியப்​பட்டி ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்​டத்​தில் சமையல் உதவி​யாள​ராகப் பணி​யாற்றி வந்தார்.

இந்​நிலை​யில், கடந்த 16-ம் தேதி பள்ளி தலைமை ஆசிரியர் பானு​ம​தி, “நீங்​கள் சமையல் செய்​வ​தால், பள்ளிக்கு வரும் குழந்​தைகள் எண்​ணிக்கை குறைகிறது. எனவே, வேலையை விட்​டு​விடுங்​கள்” என்று நிரோஷா​விடம் கூறி​னா​ராம்.

பின்​னர், தோகைமலை ஊராட்சி ஒன்​றிய மகளிர் திட்ட வட்​டார இயக்க மேலா​ளர் சத்​யா, நிரோஷாவை பணியி​லிருந்து நீக்​கி​விட்​டு, வேறு ஒரு​வரை சமையல் உதவி​யாள​ராக நியமித்​துள்​ள​தாகத் தெரி​கிறது.

இது தொடர்​பாக தோகைமலை காவல் நிலை​யம், மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் காவல் கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில் கடந்த 18-ம் தேதி நிரோஷா புகார் அளித்​தார்.

அதன்​பேரில் தோகைமலை போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி, எஸ்​.சி. எஸ்​.டி. வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட 2 பிரிவு​களின் கீழ் பள்ளி தலைமை ஆசிரியர் பானு​ம​தி, தோகைமலை வட்​டார மேலா​ளர் சத்யா ஆகியோர் மீது வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்​.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார மேலாளர் மீது வன்கொடுமை வழக்கு
புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை: என்.ஆர். காங். பிரமுகர் உட்பட 4 பேர் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in