தஞ்சாவூர் அருகே பள்ளி ஆசிரியையை கொன்ற காதலன் கைது

காவ்யா, அஜித்குமார்

காவ்யா, அஜித்குமார்

Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்​சாவூர் அருகே பள்ளி ஆசிரியையை கத்​தியால் குத்​திக் கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்​டார். தஞ்​சாவூர் அரு​கே​யுள்ள மாரி​யம்​மன் கோயில் மேல​களக்​குடியைச் சேர்ந்​தவர் புண்​ணி​யமூர்த்​தி. ஊராட்சி மன்ற முன்​னாள் தலை​வர்.

இவரது மகள் காவ்யா (26). இவர், ஆலங்​குடி அரசு தொடக்​கப் பள்​ளி​யில் தற்​காலிக நடன ஆசிரிய​ராகப் பணி​யாற்றி வந்​தார். அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்​கு​மார்​(29). பெயின்​டர். ஒரே சமூகத்​தைச் சேர்ந்த காவ்​யா​வும், அஜித்​கு​மாரும் கடந்த சில ஆண்​டு​களாக காதலித்து வந்​துள்​ளனர்.

இது காவ்​யா​வின் பெற்​றோருக்​குப் பிடிக்​க​வில்​லை, இதனால், காவ்​யாவை அவரது பெற்​றோர் வற்​புறுத்​தி, உறவினர் ஒரு​வருக்கு திரு​மணம் செய்​து​வைப்​ப​தற்​காக சில நாட்​களுக்கு முன் நிச்​சய​தார்த்​தம் செய்​துள்​ளனர். இந்த விவரத்தை அஜித்​கு​மாருக்கு தெரிவிக்​காமல், அவருடன் காவ்யா தொடர்ந்து பழகி வந்​துள்​ளார்.

நேற்று முன்​தினம் இரவு அஜித்​கு​மாருடன் செல்​போனில் பேசிக் கொண்​டிருந்த காவ்​யா, தனக்கு நிச்​சய​தார்த்​தம் செய்​யப்​பட்ட தகவலைக் கூறி உள்​ளார். மேலும், நிச்​சய​தார்த்த புகைப்​படங்​களை​யும் அஜித்​கு​மாருக்கு அனுப்பி உள்​ளார். இதனால் அதிர்ச்​சி​யடைந்த அஜித்​கு​மார், காவ்யா மீது கோபம் அடைந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், காவ்யா வழக்​கம்​போல நேற்று காலை பள்​ளிக்கு தனது இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார். மாரி​யம்​மன் கோயில் கொத்​தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே சென்​ற​போது, காவ்​யா​வின் வாக​னத்தை அஜித்​கு​மார் வழிமறித்​துள்​ளார்.

பின்​னர், நிச்​சய​தார்த்​தம் செய்​யப்​பட்​டதை ஏன் முன்​னரே கூற​வில்லை என்று கூறி காவ்​யா​விடம் வாக்​கு​ வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். இதையடுத்​து, தான் மறைத்து வைத்​திருந்த கத்​தி​யால் காவ்​யாவை அஜித்​கு​மார் குத்​தி​யுள்​ளார். இதில் படு​காயமடைந்த காவ்யா அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

தகவலறிந்த அம்​மாபேட்டை போலீ​ஸார், காவ்​யா​வின் உடலை மீட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக தஞ்​சாவூர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அஜித்​கு​மாரை கைது செய்​து, விசாரித்து வருகின்​றனர்.

தலை​வர்​கள் கண்​டனம்: தஞ்​சை​யில் ஆசிரியை வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட சம்​பவத்​துக்கு பாமக தலை​வர் அன்​புமணி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

அவர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​களில், “தஞ்​சாவூரில் பள்​ளிக்​குச் செல்​லும் வழி​யில் பெண் ஆசிரியை கொடூர​மாக கொலை செய்​யப்​பட்​டுள்ள தகவல் மிக​வும் அதிர்ச்​சி​யளிக்​கிறது.

தமிழகத்​தில் மாணவி​கள், பெண்​கள், முதி​ய​வர்​கள் என யாருக்​கும் பாது​காப்பு இல்​லாத சூழல் நில​வு​கிறது. சட்​டம்​-ஒழுங்கு சீரழிந்​து​விட்​டது. போலீ​ஸார் கண்​காணிப்​பைத் தீவிரப்​படுத்​தி, இனி​யும் இது​போன்ற சம்​பவங்​கள் நிகழாமல் தடுக்க வேண்​டும்” என்று வலியுறுத்​தி​யுள்​ளனர்​.

<div class="paragraphs"><p>காவ்யா,&nbsp;அஜித்குமார்</p></div>
உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in