கோயிலில் இருந்து திருடி வெளிநாட்டுக்கு அம்மன் சிலை கடத்த முயற்சி: 3 பேர் கும்பல் கைது

மீட்கப்பட்ட அம்மன் சிலை.

மீட்கப்பட்ட அம்மன் சிலை.

Updated on
1 min read

சென்னை: கோயி​லில் இருந்து திருடி வெளி​நாட்​டுக்கு அம்மன் சிலையை கடத்த முயன்ற 3 பேரை சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

காஞ்​சிபுரம் சரக சிலை திருட்டு தடுப்​புப் பிரிவு காவல் ஆய்​வாளர் உமா​ராணிக்​கு, காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் தாலுகா திம்​ம​ராஜன்​பேட்டை பேருந்து நிறுத்​தம் அருகே 3 பேர் தொன்​மை​யான சிலையை பை​யில் வைத்து கடத்த முயற்​சிப்​ப​தாக ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்து தனிப்​படை போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​தனர். அப்​போது அங்கு நின்​றிருந்த 3 பேர் போலீ​ஸாரை கண்​டதும் தப்பி ஓட முயன்​றனர். அவர்​களை மடக்​கிப்​பிடித்து விசா​ரணை நடத்​தி​ய​தில், பிடிபட்​ட​வர்​கள் செங்​கல்​பட்டு மாவட்​டம் தெள்​ளிமேடு பகு​தி​யைச் சேர்ந்த பிரேம்​கு​மார் (33), அதே மாவட்​டம் ஆத்​தூர் வடபா​தி​யைச் சேர்ந்த புருஷோத்​தமன் (33), காஞ்​சிபுரம் மாவட்​டம் நத்​தப்​பேட்​டையைச் சேர்ந்த விக்​னேஷ் (36) என்​பது தெரிய​வந்​தது.

விக்​னேஷ் வைத்​திருந்த பையை சோதனை செய்​த​போது, 30.5 செ.மீ. உயரம், 16 செ.மீ. அகலம், சுமார் 2.300 கிலோ எடை கொண்ட தொன்​மை​யான உலோக அம்​மன் சிலை இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. அந்த சிலையை வெளி​நாட்​டுக்கு கடத்த திட்​ட​மிட்​டதும் உறுதி செய்​யப்​பட்​டது.

முதற்​கட்ட விசா​ரணை​யில், தமிழகத்​தில் உள்ள ஏதேனும் ஒரு கோயி​லில் இருந்து அந்த சிலை சட்​ட​விரோத​மாக திருடப்​பட்​டிருக்​கலாம் என்று போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர்.

இதையடுத்து 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். பின்​னர் அவர்​களை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி சிறை​யில் அடைத்​தனர். தற்​போது மீட்​கப்​பட்​டுள்ள சிலை எந்த கோயிலுக்கு சொந்​த​மானது, இதன் பின்​னணி​யில் செயல்​படும் சிலை கடத்​தல் கும்​பல் குறித்து சிலை கடத்​தல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர். பறி​முதல் செய்​யப்​பட்ட சிலை​யின் மதிப்பு பல கோடி ரூபாய்​ இருக்​கும்​ என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>மீட்கப்பட்ட அம்மன் சிலை.</p></div>
சென்னை | தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை திருடிய 2 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in