கோவை | காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

கோவை | காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு
Updated on
1 min read

கோவை: கோவையில் காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி(20), பேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவரும், அதே கல்லூரியில் படித்துவந்த மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய்(20) என்பவரும் காதலித்துவந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 8-ம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர்.

ரமணியின் தந்தை புகாரின்பேரில், செல்வபுரம் போலீஸார் இரு குடும்பத்தாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். சஞ்சயின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால், புதுமண ஜோடியை அவர்களுடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில்,நேற்று முன்தினம் மாலை வீட்டில் படுக்கை அறையில் ரமணி மயங்கிகிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, ரமணி உயிரிழந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த ஆலாந்துறை போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை பிரேதப் பரிசேதாதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ரமணியின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்ட புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in