எண்ணெய் ஆலை இயந்திரத்தில் சிக்கி மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்பு: காங்கயம் போலீஸ் விசாரணை

எண்ணெய் ஆலை இயந்திரத்தில் சிக்கி மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்பு: காங்கயம் போலீஸ் விசாரணை
Updated on
1 min read

திருப்பூர்: மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பப்லு பிரமானிக் (21). இவர், காங்கயம் அருகே சாத்திரவலசு பகுதியில் உள்ள எண்ணெய் ஆலையில் பணியாற்றி வந்தார்.

நேற்று காலை ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அருகில் இருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பப்லு பிரமானிக் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக காங்கயம் காவல் ஆய்வாளர் காமராஜ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in