ஊத்தங்கரை அருகே இருவர் படுகொலை விசாரணை: கிருஷ்ணகிரி ஆட்சியர், எஸ்பி ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு

ஊத்தங்கரை அருகே இருவர் படுகொலை விசாரணை: கிருஷ்ணகிரி ஆட்சியர், எஸ்பி ஆஜராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே நடந்த இருவர் படுகொலை தொடர்பான விசாரணைக்கு, கிருஷ்ணகிரி ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் நாளை (20-ம் தேதி) நேரில் ஆஜராகத் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அருணபதியில் தண்டபாணி என்பவர் காதல் திருமணம் செய்த தனது மகன் சுபாஷ் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த தாய் கண்ணம்மாள் ஆகியோரை கடந்த 15-ம் தேதி, வெட்டிக் கொலை செய்தார். இதில், படுகாயம் அடைந்த அவரது மருமகள் அனுசுயா (25) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இக்கொலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹேல்டர் நாளை (20-ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் விசாரணை மேற்கொள்ள உள்ளார். இப்படுகொலை தொடர்பான விவரங்களுடன் கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேக்கப், எஸ்பி சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் நாளை (20-ம் தேதி) பகல் 12 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமே நேரில் ஆஜராக வேண்டும். இதில், சிறப்பு விசாரணை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாகவும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in