சென்னை | மன நலம் பாதிக்கப்பட்டவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

சென்னை | மன நலம் பாதிக்கப்பட்டவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை வளசரவாக்கம், மவுன்ட்-பூந்தமல்லி சாலையில் உள்ள போரூர் மீன் சந்தை அருகே கடந்த 13-ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட, 30 வயதுடைய இளைஞர் ஒருவர் காயங்களுடன் சாலையில் மயங்கிக் கிடப்பதாக வளசரவாக்கம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் அந்த இளைஞரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

அவரது உடலில் காயங்கள் இருந்ததால் கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, கொலை தொடர்பாக விருகம்பாக்கம் சின்மயா நகரைச் சேர்ந்த சிவராமகிருஷ்ண்ன்(20), காரப்பாக்கம் கணேசன்(42), ஜெய் முத்துவேல் (40) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in