காஞ்சி கூட்டு பாலியல் வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

காஞ்சி கூட்டு பாலியல் வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவியை 6 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு முகக் கவசம் அணிந்தபடி வந்த 6 பேர் காதலன் கண்முன்னே மாணவியை கூட்டாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் காஞ்சிபுரம் வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (எ) விக்கி, செவிலிமேடு மணிகண்டன், விப்பேடு இருளர் குடியிருப்பைச் சேர்ந்த சிவக்குமார் (எ) ஊக்கு ஆகிய முக்கிய குற்றவாளியான 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in