

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்கவும், ரவுடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் நேற்று முன்தினம் (ஏப்.7) இரவில் பல்வேறு இடங்களில் போலீஸார் வாகனச் சோதனை நடத்தினர்.
தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சோதனையிட்டனர். 1,247 வாகனங்களை தணிக்கை செய்ததில் போதை யில் வாகனம் ஓட்டியதாக 5 பேர் உட்பட போக்குவரத்து விதி களை மீறியதாக 447 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குகளில் தேடப்பட்டு வந்த வேடப்பட்டி பிரிட்டோ ஆண்டனி(29), திண்டுக்கல் அசோக்குமார்(41) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் 7 ரவுடிகள் உட்பட மொத்தம் 80 பேர் மீதும், மது விற்பனையில் ஈடுபட்டதாக 13 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பழநி அருகே ஆயக்குடியில் கோயிலில் நகை திருடிய வழக்கில் ஆந்திர மாநிலம் தும்மல்குண்டாவைச் சேர்ந்த உமேஷ்(40), தீராஜ் (21) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.