

சென்னை: உயர் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கியபகுதிகளில் ட்ரோன்கள் பறக்கதடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆவின் நுழைவாயில் அருகே நேற்று முன்தினம் ட்ரோன் ஒன்று பறந்து வீடியோகேமராவில் படம் பிடித்தது.
எஸ்பிளனேடு போலீஸார் ட்ரோனை பறக்கவிட்டதாக வித்யாசாகர் (27), விக்னேஸ்வரன் (30), சூர்யா (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். தனியார் நிறுவனவிழாவுக்காக படம் பிடித்ததாக பிடிபட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.