கும்பகோணம் | சமூக வலைதளங்களில் முதல்வர் குறித்து அவதூறு: சென்னையை சேர்ந்தவர் கைது

கும்பகோணம் | சமூக வலைதளங்களில் முதல்வர் குறித்து அவதூறு: சென்னையை சேர்ந்தவர் கைது
Updated on
1 min read

கும்பகோணம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக சென்னையைச் சேர்ந்த ஜான் ரவி (40) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த ஜான் ரவி என்பவர், குஜராத்தில் தொழில் செய்து வருகிறார். இவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரை அவதூறாக விமர்சனம் செய்து, பிப்.21-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அரசு வழக்கறிஞர் ராஜசேகர், பந்தநல்லூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜான் ரவியை சென்னையில் கைது செய்து, பந்தநல்லூருக்கு அழைத்து வந்தனர். திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in