சென்னை | செல்போன் பறிப்பு: 3 பேர் கைது

சென்னை | செல்போன் பறிப்பு: 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை, அசோக் நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த் (22) கடந்த 12-ம் தேதி இரவுகே.கே.நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த 2 பேர் பிரசாந்தை தாக்கி செல்போனை பறித்து தப்பினர்.

பிரசாந்த் இதுகுறித்து கே.கே.நகர் போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்துசிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் செங்குன்றம் வடகரையைச் சேர்ந்த கிருபாகரன் (21), அவரது கூட்டாளி விக்னேஷ்(19) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச்சேர்ந்த நாகூர் மீரான் (36) கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘`கைது செய்யப்பட்ட கிருபாகரன்,விக்னேஷ் ஆகியோர் சென்னையில் பல இடங்களில் 13 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் பறிக்கும் செல்போன்களைநாகூர் மீரான் வாங்கி அண்டை மாநிலங்களில் விற்றுள்ளார். அவர்களிடமிருந்து 16 செல்போன்களை பறிமுதல்செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணைநடைபெறுகிறது'’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in