சென்னை | ரயிலில் 14 கிலோ கஞ்சா கடத்தியதாக 2 பேர் கைது

சென்னை | ரயிலில் 14 கிலோ கஞ்சா கடத்தியதாக 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு நேற்று மதியம்பினாகினி விரைவு ரயில் வந்தது. இதில் இறங்கி வந்த பயணிகளை ரயில்வே போலீஸார் கண்காணித்தனர்.

அப்போது, இரண்டு பேர் மீதுபோலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்துவிசாரித்தபோது, முன்னுக்குபின்முரணாக பேசினர். இதையடுத்து,அவர்களின் உடைமைகளை சோதித்தபோது, அதில் 14 கிலோகஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

இதைத்தொடர்ந்து, அவர்களை கைது செய்து விசாரித்தபோது, அவர்கள் கர்நாடகாவைச் சேர்ந்த சந்தோஷ் (21), மற்றொருவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் என்பதும், விஜயவாடாவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை எடுத்துவந்ததும் தெரியவந்தது. இருவர் மீதும் ரயில்வே போலீஸார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in