

விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று முன்தினம் இரவு இரு பிரிவினரி டையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஒரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். விருதுநகர் அருகே உள்ள குப் பாம்பட்டியில் பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இரு பிரி வினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், குப்பாம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி, அவரது தாய் பஞ்சவர்ணம் (70) ஆகியோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில், குப்பாம்பட்டியைச் சேர்ந்த ரவீந்திரன், சூரியபிரகாஷ், முனி யப்பன், கபிலன், முனியசாமி, அய்யனார், இளஞ்சியம் ஆகியோர் மீது சூலக்கரை போலீஸார் வழக் குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டோரின் ஆதரவாளர்கள் எதிர் தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யக் கோரியும், உரிய விசாரணை நடத்தக் கோரியும் மாவட்ட எஸ்பியிடம் நேற்று மனு அளித்தனர்.