கும்பகோணம் | பாமக முன்னாள் நிர்வாகி கொலை: சிறுவன் உட்பட 5 பேர் கைது

கும்பகோணம் | பாமக முன்னாள் நிர்வாகி கொலை: சிறுவன் உட்பட 5 பேர் கைது
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த சோழபுரம் மேலானமேட்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம்(51). பாமக முன்னாள் பேரூர் தலைவராக இருந்த இவருக்கும், இவரது வீட்டின் அருகிலுள்ள ராஜேந்திரனுக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, திருஞானசம்பந்தத்தை ராஜேந்திரன் மற்றும் சிலர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து சோழபுரம் போலீஸார் ராஜேந்திரன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்த ராஜேந்திரன் உள்ளிட்டோர், திருஞானசம்பந்தத்தை, கடந்த ஜன.10-ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து சோழபுரம் ராஜேந்திரனின் மகள் விஷ்ணுப்பிரியா (27), மருமகன் ராஜா (31) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை அன்றைய தினமே போலீஸார் கைது செய்தனர். ராஜேந்திரன் (51), அவரது மூத்த மகன் மணிகண்டன் (21) ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in