கோவை | காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

கோவை | காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
Updated on
1 min read

கோவை: கோவை செம்மேடு காந்தி காலனியில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள சுற்றுச்சுவர் இல்லாத 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் நேற்று பெண் சடலம் கிடந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற ஆலாந்துறை போலீஸார் சடலத்தை மீட்டனர்.

கையில் அணிந்திருந்த மோதிரம் மற்றும் பேண்ட் உள்ளிட்டவை அடிப்படையில் உயிரிழந்த பெண் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சுபஸ்ரீ (34) என தெரியவந்தது. சடலத்தை உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர்.

அவரது கணவரிடம் போலீஸார் விசாரித்தபோது, ஈஷா யோகா மையத்தில் 7 நாள் யோகா பயிற்சியை முடித்து வெளியேறியவர் வீட்டுக்கு வரவில்லை என்றும், இது பற்றி ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார். போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in