

தாம்பரம்: அண்ணா நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கைல் தாமஸ் (18). அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் கிளெமென்ட் ஜோசுவா (18).
இருவரும் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று மாலை இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தபோது தாம்பரம் சானடோரியம் அருகில் மினி லாரி மோதி அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் உடல்களை மீட்டு குரோம்பேட்டை அரசுமருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.