சோழவரம் அருகே நடந்த கொலை வழக்கில் திமுக ஊராட்சி தலைவர் கைது

சோழவரம் அருகே நடந்த கொலை வழக்கில் திமுக ஊராட்சி தலைவர் கைது
Updated on
1 min read

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அலமாதி அடுத்துள்ள எடப்பாளையம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் முரளி (26). இவர் கடந்த அக்டோபர் 29-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய சோழவரம் போலீஸார், அலமாதி சாந்தி நகரைச் சேர்ந்த திலீபன், நவீன், தீபன், ஆறுமுகம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்

இந்த கொலை வழக்கில்,திமுகவைச் சேர்ந்த அலமாதி ஊராட்சித் தலைவர் தமிழ்வாணனுக்கு தொடர்புள்ளதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் முரளியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, முரளிகொலை வழக்கில் அலமாதி ஊராட்சித் தலைவர் தமிழ்வாணனும் சேர்க்கப்பட்டார்.

இதையறிந்து, அவர் தலைமறைவானார். அவரை தேடிவந்தநிலையில், அலமாதி பகுதியில் இருந்த தமிழ்வாணனை நேற்றுமுன்தினம் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in