திருச்சி | ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் கைது

பாஸ்கரன்
பாஸ்கரன்
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாப்பாகுறிச்சியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (42). ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இவர், அதே பகுதியில் உள்ள 21 சென்ட் விவசாய நிலத்தை வாங்கி பத்திரப் பதிவு செய்ய திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

சார்பதிவாளர் பாஸ்கரன், நிலத்தை அரசு மதிப்பீட்டின்படி சதுர அடி மதிப்பில் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்றும், விவசாய நிலமாக பத்திரப் பதிவு செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து அசோக்குமார் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார்.

அதன்பிறகு, நேற்று அசோக்குமார் தந்த ரூ.1 லட்சம் பணத்தை பெற்றபோது பாஸ்கரனை போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in