சென்னை | பிரியாணி கடை உரிமையாளர் கொலை

சென்னை | பிரியாணி கடை உரிமையாளர் கொலை
Updated on
1 min read

சென்னை: அமைந்தகரை, கலெக்டர் காலனியைச் சேர்ந்தவர் நாகூர் கனி (33). இவர், அயனாவரம் சந்தை அருகில் கடந்த 2 ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் கடையில் இருந்தார். அப்போது, அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் நாகூர் கனியை வெட்டிவிட்டு தப்பியது.

இதில், நாகூர் கனி, சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து அயனாவரம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவானவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாகூர் கனி மீது, அரும்பாக்கம் காவல் நிலைத்தில் குற்ற வழக்கு உள்ள நிலையில் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in