

உதகை: நீலகிரி மாவட்டம் எடக்காடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜீவா (25). கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 17 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் உதகை ஊரக மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பை, நீதிபதி நாராயணன் நேற்று அறிவித்தார். அதன்படி, சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய குற்றத்துக்காக, ஜீவாவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் செந்தில் ஆஜரானார்.