குமராட்சி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு பதிவு

குமராட்சி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

குமராட்சி அருகே ஆலம்பாடி அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கார்மேகம் (30). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும், சிதம்பரம் அருகே உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில் கடந்த 5-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இது குறித்து நேற்று தகவலறிந்த குமராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் சுமதி, சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸார், கார்மேகம், அவரது தந்தை சுப்பிரமணியன், அவரது தாயார் விஜயகுமாரி, சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in