

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஜோலார் பேட்டை அடுத்த பார்சம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(22) என்பவர்தான், மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஜோலார்பேட்டை காவல் துறையினர் பிரபாகரன் மீது போக்சோ சட்டம் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.