Published : 23 Sep 2022 04:35 AM
Last Updated : 23 Sep 2022 04:35 AM

சிவகாசி அருகே போக்ஸோவில் தந்தை கைது

சிவகாசி

சிவகாசி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி எம்.புதுப்பட்டிசெவலுாரைச் சேர்ந்தவர் அழகப்பன். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் இவரது மனைவி மூன்று மாதங்களுக்கு முன் தாய் வீட்டுக்குச் சென்றார். சில நாட்களுக்கு முன் அழகப்பன் மகள், மகனை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில் 15 வயது மகள் வீட்டில் தூங்கும்போது அழகப்பன் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் எம்.புதுப்பட்டி போலீஸில் புகார் அளித்தார்.போலீஸார் சிறுமியின் தந்தையை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டுகாப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x