Published : 22 Sep 2022 04:17 AM
Last Updated : 22 Sep 2022 04:17 AM

ரேஷன் அரிசி கடத்தல் - ஒரே வாரத்தில் 184 பேர் கைது

சென்னை: உணவுத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து ரோந்துப்பணி மேற்கொண்டு ரேஷன் அரிசி கடத்தல்மற்றும் பதுக்கலை தடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த செப்.12 முதல் 18 வரை ஒரே வாரத்தில், கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ.10.27லட்சம் மதிப்புள்ள, 1,818 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, அக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 52 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x