அரியலூர் | சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை

அரியலூர் | சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை
Updated on
1 min read

அரியலூர்: அரியலூரை அடுத்த கல்லமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்(19). இவர், 2020-ம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்திச் சென்று, திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அஜித்தைகைது செய்தனர்.

இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்றம்சாட்டப்பட்ட அஜித்துக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

மற்றொரு வழக்கு: திருச்சி வடக்கு தாராநல்லூர் வேலுபிள்ளைநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(28). தொழிலாளியான இவர், 29.3.2020-ம் தேதி 7 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு முயற்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், சிறுமியை பாலியல் தொல்லை அளிக்க கடத்திச் செல்ல முயன்றதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதமும், போக்ஸோ சட்டத்தில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து, சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக அருள்செல்வி ஆஜராகி வாதாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in