வேலூர் | சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த முதியவர் கைது

வேலூர் | சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த முதியவர் கைது
Updated on
1 min read

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியைச் சேர்ந்தவர் கனி (58). இவர், மது போதையில் அதே பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் கனியை சரமாரியாக தாக்கி காட்பாடி காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in