திருவண்ணாமலை அருகே 3 குழந்தைகளை ஆற்றில் தள்ளிவிட்டு கொலை: தற்கொலைக்கு தாயும் முயற்சி

திருவண்ணாமலை அருகே 3 குழந்தைகளை ஆற்றில் தள்ளிவிட்டு கொலை: தற்கொலைக்கு தாயும் முயற்சி
Updated on
1 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தென் பெண்ணையாற்றில் 3 குழந்தைகளை தள்ளி கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு தாய் முயன்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சதாகுப்பம் கிராமத்தில் வசிப்பவர் கட்டிடத் தொழிலாளி பரசுராமன் மனைவி அமுதா(27).

இவர் தனது 5 மற்றும் 4 வயது மகன்கள் மற்றும் 7 மாத பெண் குழந்தையுடன் வாழவச்சனூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் நேற்றுஉயிருக்குப் போராடினர். இதையறிந்த கிராம மக்கள் ஆற்றில் இறங்கி 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில், அமுதா உயிருடன் மீட்கப்பட்டார். மேலும், உயிரிழந்த நிலையில் 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்ததகவலின் பேரில், வாணாபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அமுதாவை சிகிச்சைக்காகவும் மற்றும் 3 குழந்தைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காகவும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in