பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: டியூஷன் எடுத்த இளம்பெண், காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: டியூஷன் எடுத்த இளம்பெண், காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
Updated on
1 min read

சென்னை: பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், டியூஷன் எடுத்து வந்த இளம்பெண் மற்றும் அவரது பள்ளிப் பருவ காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை தியாகராய நகர்பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் திருமணமாகாத இளம்பெண் (29) ஒருவர், தனது வீட்டில் டியூஷன் எடுத்து வந்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டுக்கு எதிர் வீட்டில், திருமணமான அவருடைய பள்ளிப் பருவ காதலன் (30)தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இளம்பெண்ணும், காதலனும் நெருங்கிப் பழகி வந்தநிலையில் தன்னிடம் டியூஷன் படித்த 7-ம் வகுப்பு மாணவியை கடந்த 2018-ம் ஆண்டு ஜூலைமாதம் அவர்கள் இருவரும் கிழக்குகடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்த மாணவியை, இளம்பெண்ணின் காதலன் தனிஅறையில் அடைத்து பாலியல்வன்கொடுமை செய்துள்ளார்.

அந்த இளம்பெண் மறைவாக இருந்து இதை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் இந்த வீடியோவை உன் பெற்றோருக்கு அனுப்பிவிடுவோம் என்று கூறி அவ்வப்போது அந்த மாணவியிடம் நகை, பணத்தை மிரட்டி வாங்கியுள்ளனர்.

ஒருகட்டத்தில், வீட்டில் இருந்துநகை, பணம் தொடர்ந்து மாயமாகி வருவது குறித்து மாணவியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, நடந்த சம்பவங்களை மாணவி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, டியூஷன் எடுத்த இளம்பெண் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ரூ.10 லட்சம் இழப்பீடு

சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி குற்றச்சாட்டுகளை நிரூபித்தார்.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி எம்.ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in