Published : 01 Jul 2022 06:19 AM
Last Updated : 01 Jul 2022 06:19 AM
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே வேதாளை யில் 480 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மண்டபம் வனத்துறையி னருக்கு வேதாளை கடற்கரையி லிருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த சிலர் முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் வனத்துறையினரும், போலீஸாரும் ரோந்து சென்றனர்.
அவர்களை பார்த்ததும் கடத்தல்காரர்கள் 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பெட்டி களை வேதாளை கடற்கரை தோப்பிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பிளாஸ்டிக் பெட்டிகளில் 480 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவற்றை இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக அங்கு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட தோப்பின் உரிமையாளர் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்து காவல் துறையினரும், வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT